TN Budget 2025: அடித்தது ஜாக்பாட் ! குஷியில் கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள்! என்ன அறிவிப்பு தெரியுமா ?
TN Budget 2025: கள்ளக்குறிச்சி, சேலம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ரூ.7 கோடி செலவில் தொல்லியல் அகழாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு 2025-26-ம் நிதி ஆண்டுக்கான அரசு பொது பட்ஜெட்டை அறிவிப்பில் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேந்தமங்கலம் கோட்டை, தியாகதுர்கம் கோட்டை போன்ற இடங்களில் இதுவரை அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது, மேலும் 10-ம் நூற்றாண்டு பிச்சாடனர் சிற்பம் மணலூர்பேட்டையில் கண்டறியப்பட்டுள்ளது.
சேந்தமங்கலம் கோட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள இக்கோட்டை காடவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு 1992-93 மற்றும் 1994-95 ஆம் ஆண்டுகளில் அகழாய்வு நடந்துள்ளது.
தியாகதுர்கம் கோட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தியாகதுர்கம் என்ற இடத்தில் உள்ள இக்கோட்டை கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
பிச்சாடனர் சிற்பம்: திருக்கோவிலூர் அருகே, விழுப்புரம் மாவட்டம் (புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி) தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மணலூர்பேட்டையில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிச்சாடனர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 2025-26-ம் நிதி ஆண்டுக்கான அரசு பொது பட்ஜெட்டை அறிவிப்பில் கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பொது பட்ஜெட்
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பொது பட்ஜெட்டை, சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, இந்த பட்ஜெட் தாக்கலாகி உள்ளது. இது, நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள 2-வது பட்ஜெட் ஆகும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற நேக்கில் இந்த பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இன்றைய பட்ஜெட்தான் இந்த அரசு தாக்கல் செய்யும் 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மகளிர் விடியல் பயண திட்டத்துக்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறும்.
சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு.
100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்
ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் செயல்ப்டுத்தப்படும்.
முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ. நீளம் சாலை அமைக்கப்படும், இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்.
ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் என்ற வகையில் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டித்தரப்படும்.
ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
ஐ.நா. அவை அங்கீகரித்துள்ள 193 மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை பெறுகிறது திருக்குறள்..மேலும் 45 உலக மொழிகளில் திருக்குறள்
சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் நொய்யல், ராமநாதபுரம் மாவட்டம் நாவாப் பகுதிகளில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.