TN Budget 2022: அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு ரூ. 1000 ..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்..!
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் ரூபாய் 1000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement

நிதியமைச்சர் - அரசுப்பள்ளி மாணவிகள்
தமிழ்நாட்டின் 2022 -23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார்.
Continues below advertisement
பட்ஜெட் உரையின்போது பள்ளிக்கல்வித்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய நிதியமைச்சர், அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : TN Budget 2022 LIVE: பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வித் திட்டம்... சென்னை வெள்ளத்திற்கு ரூ.500 கோடி... பட்ஜெட் அறிவிப்புகள் இதோ
Continues below advertisement
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.