நாள்: 21.11.2022


நல்ல நேரம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை






 

மதியம் 9.15 மணி முதல் மதியம் 10.15 மணி வரை

 

மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை




இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


எமகண்டம்:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொதுக்கூட்ட பணிகளில் ஆதரவு மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஜவுளி வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


ரிஷபம்


இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். தாமதம் அகலும் நாள். 


மிதுனம்


மனதில் குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் உள்ள சில நுட்பங்களை அறிவீர்கள். கேளிக்கை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சமயோஜிதமான சிந்தனைகளின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.


கடகம்


அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வாகன பயணங்களால் லாபமும், அனுபவமும் உண்டாகும். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.


சிம்மம்


மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வரவு நிறைத்த நாள்.


கன்னி


அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.


துலாம்


உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவி கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நன்மை நிறைந்த நாள்.


விருச்சிகம்


நுட்பமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.


தனுசு


நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விருப்பமான உணவினை உண்டு மகிழ்வீர்கள். ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


மகரம்


மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், லாபமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.


கும்பம்


உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.


மீனம்


எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சிந்தித்து செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கால்நடை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.