இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 25, 2024: 


 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....



மேஷ ராசி

 

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஒப்பந்த செயல்களில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

 

ரிஷப ராசி

 

உயர்கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மருத்துவத் துறையில் ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். புதுவிதமான ஆடைகளில் ஆர்வம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

 

மிதுன ராசி

 

மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் மேம்படும். கணிதத் துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனை விற்றல், வாங்கலில் லாபம் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

 

 கடக ராசி

 

சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பழைய பிரச்சனைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிக்கடியான சூழல் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

 

 சிம்ம ராசி

 

நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதியால் செயலில் தாமதம் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். பலரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புகழ் நிறைந்த நாள்.

 

 கன்னி ராசி

 

பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தனிப்பட்ட செயல்களில் கவனம் வேண்டும். பலம், பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.

 

 துலாம் ராசி

 

மனதளவில் உத்வேகம் உண்டாகும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். மறைமுக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

 

விருச்சிக ராசி

 

மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடன்பிறப்புகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். 

 

தனுசு ராசி

 

எதிலும் படபடப்பு இன்றி செயல்படவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபார விஷயங்களில் விவேகம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைப் பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். கவனம் வேண்டிய நாள்.

 

மகர ராசி

 

கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் மறையும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். காணாமல் போன சில பொருட்கள் கிடைக்கும். வர்த்தகத் துறையில் மேன்மை ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.

 

கும்ப ராசி

 

சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அரசு காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைகளில் கவனம் வேண்டும். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

 

மீன ராசி

 

தாயார் வழியில் ஆதரவு ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கலைசார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பாரம்பரிய விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும். காரியசித்தி நிறைந்த நாள்.