நாள்: 29.04.2024 


கிழமை: திங்கள்


நல்ல நேரம்:


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 7.30 மணி முதல் மாலை 9.00 மணி வரை


குளிகை:


பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை


எமகண்டம்:


காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் விலகும். மனதில் எண்ணிய சில பணிகள் நிறைவுபெறும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.  


ரிஷபம்


பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பயணம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள். 


மிதுனம்


மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.


கடகம்


எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.


சிம்மம்


உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


கன்னி


உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழல் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.


துலாம்


உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்பு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.


விருச்சிகம்:


நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.


தனுசு


மனதில் புதுவிதமான சிந்தனை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மற்றவர்களின் கருத்துகளில் உள்ள உண்மை நிலையை அறிந்து முடிவெடுக்கவும். இலக்கியப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


மகரம்


உடன் இருப்பவர்கள் இடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடி உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை மேம்படும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பகை விலகும் நாள்.


கும்பம்


இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி மேம்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். அன்பு மேம்படும் நாள்.


மீனம்


வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.  வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும்.  சுகம் நிறைந்த நாள்.