நாள் - 10.09.2023 - ஞாயிற்று கிழமை


நல்ல நேரம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை 


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


மறைமுகமான விமர்சனங்கள் குறையும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். அலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் மேம்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


ரிஷபம்


தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும்.  ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். கணிதத்துறைகளில் நிபுணத்தன்மைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பெருந்தன்மையான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகங்களைப் பெறுவீர்கள். பக்தி நிறைந்த நாள்.


மிதுனம்


சிந்தனை ஓட்டங்களில் மாற்றம் ஏற்படும். நிர்வாக துறைகளில் தனித்தன்மைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கை மேம்படுத்துவதற்கான சில விரயங்கள் உண்டாகும். குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


கடகம்


நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.  வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உணவு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.


சிம்மம்


செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் மாற்றத்தைத் தரும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.   


கன்னி


எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் அலைச்சலும், பொறுப்பும் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். சங்கம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.


துலாம்


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஏற்றுமதி, இறக்குமதியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். தனவரவுகளில் பொறுமையை கையாளவும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். வரவுகள் மேம்படும் நாள்.


விருச்சிகம்


வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். கால்நடை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். உயர்வு நிறைந்த நாள்.


தனுசு


சகோதரர் வழியில் சாதகமான சூழல் அமையும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும்.  சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்குத் திருப்தியை ஏற்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.


மகரம்


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்குத் தெளிவை ஏற்படுத்தும். வாகனம் தொடர்பான பழுதுகளைச் சீர் செய்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். லாபம் நிறைந்த நாள். 


கும்பம்


பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். முகத்தில் பொலிவு மேம்படும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


மீனம்


எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வேலை மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.