காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும். இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: 15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்
கு.ராஜசேகர் | 12 Sep 2022 02:36 PM (IST)
15 நாட்களாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கும் விவசாயிகள். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என புகார்.
நெல்
Published at: 12 Sep 2022 02:36 PM (IST)