மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை, வேளாண்துறை, மின்சார துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற நிலையில், தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும், குருவை சாகுபடிக்கு தேவையான மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நீர்நிலைகளை பாதிக்கும் ஒருங்கிணைந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2023 திரும்ப பெற வலியுறுத்தியும், செறிவூட்டப்பட்ட அரிசியை எந்த ஒரு ஆய்வு செய்யாமல் மக்களுக்கு விநியோகிப்பதை கண்டித்தும் முழக்கமிட்டனர்.




தொடர்ந்து இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு போதிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்குவதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து  கோஷங்கள் எழுப்பினர். இதனால் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை  அடுத்து கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளில் ஒரு பிரிவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.


Honda Dio H: விரைவில் வருகிறது ஹோண்டாவின் டியோ H ஸ்மார்ட் வேரியண்ட்.. விலை உள்ளிட்ட விவரங்கள் இதோ..!




தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கு வாயிலில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கண்டித்தும், புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து இயற்கை விவசாயும், சமூக ஆர்வலருமான நலம் சுதாகர் கூறுகையில், செறிவூட்டப்பட்ட அரிசிக்கு எதிராக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகளவு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வலியுறுத்தி மனு அளித்து வருகிறோம்.


Gill Sachin Family: களத்தில் அடிக்கும் கில், வலி தாங்கும் சச்சின் குடும்பம்.. அத்துமீறும் மீம் கிரியேட்டர்ஸ்?




இருந்த போதிலும் எங்கள் மனுக்கள் தொடர்பாக எந்த ஒரு பதிலும் அளிக்காமல், மாவட்ட நிர்வாகம் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இந்த செயல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தையும், வேதனையும் ஏற்படுத்தி வருகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


TN Rain Alert: இன்று 12 மாவட்டங்களில் செம்ம மழை இருக்கு... எந்தெந்த மாவட்டங்களில்? லேட்டெஸ்ட் வானிலை அப்டேட் இதோ..