மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு.

Continues below advertisement

 

 

Continues below advertisement

 

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, காலை வினாடிக்கு 10,161 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 9,516 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் 896 கன அடியும் தென்கரை வாய்க்காலில் 200 கனஅடியும் கீழ் கட்டளை வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் 20 காண அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

அமராவதிஅணை

 

 

 

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, அமராவதி அணையில் இருந்து காலை வினாடிக்கு 175 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய் காலில் வினாடிக்கு, 252 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதி அணைக்கு, வினாடிக்கு, காலை 752 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 46.46 அடியாக இருந்தது.

 

 

 

 

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி  தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.49 அடியாக இருந்தது. இதனால் பாசன வாய்கலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண