உருளைக்கிழங்கு இல்லாத சமையலைப் பார்ப்பதே அரிது.



ஆனால் குறைந்த கார்ப் உணவுகளை விரும்புவதால் மக்கள் பெரும்பாலும் மிகவும் பிடித்த இந்தக் கிழங்குகளை உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.



அண்மையில் வெளியான ஒரு ஆய்வின்படி உருளைக்கிழங்கு அப்படியொன்றும் ஆபத்தான காய்கறி இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.



அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் இதழின் ஆராய்ச்சியாளர்கள்,



நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் அளவு உருளைக்கிழங்கையோ அல்லது



அதன் குடும்ப வகையான சர்க்கரைக்கிழங்கைச் சாப்பிடுவதோ தீங்கு விளைவிப்பதில்லை என்பதை வெளிப்படுத்தியது.



மேலும் உருளைக்கிழங்கு வறுக்கப்பட்டதா இல்லையா என்பது அதை உட்கொள்வதில் முக்கியமல்ல எனக் குறிப்பிட்டுள்ளது



30 வயதுக்கு மேற்பட்ட 2,523 பேரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில்



உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் டிஸ்லிபிடெமியா போன்ற உடல்நலக் குறைபாடுகளுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.



இது ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். அவை செல் அளவில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் உதவுகிறது- ஆய்வாளர்கள்.