பல குழந்தைகள் தாமதமாக எழுவதால் காலை உணவு சாப்பிட நேரம் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் வெறும் வயிற்றுடன் பள்ளிக்குச் செல்கிறார்கள்.
இரவு தாமதமாக உணவு உண்பது அல்லது அதிகமாக நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதால் காலையில் பசி எடுக்காமல் போகலாம்.
சத்தான உணவை விட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் இனிப்புகள் அதிகமாக சாப்பிடும் குழந்தைகள் காலை உணவில் ஆர்வம் காட்டாமல் இருக்கலாம்.
காலை உணவைத் தவிர்த்தால் உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்காததால் குழந்தைகள் சோர்வாக உணர்வார்கள்.
காலை உணவு இல்லையென்றால் வகுப்பறையில் பாடங்களில் கவனம் செலுத்துவது கடினமாகிவிடும். இதனால் கவனம் குறையும்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கற்றுக்கொண்ட விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் குறைய வாய்ப்புள்ளது, நினைவாற்றல் பாதிக்கப்படலாம்.
காலை உணவு உண்ணும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் அதை தவிர்ப்பவர்களில் கல்வி செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெறும் வயிற்றில் இருப்பதால் எரிச்சல், பொறுமையின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தோன்றலாம்.
காலை உணவைத் தவிர்த்த குழந்தைகள் பின்னர் அதிக பசியுடன் சிப்ஸ், சாக்லேட்டுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது
பால், முட்டை, பழங்கள், ஓட்ஸ், இட்லி, உப்புமா போன்ற சத்தான உணவை காலையில் எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஆற்றல், கவனம், மேம்பட்ட கற்றல் திறன் கிடைக்கும்.