திராட்சை பழத்தை சுத்தம் செய்வது எப்படி? - ஈஸி டிப்ஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 10–15 நிமிடங்கள் திராட்சையை வைக்க வேண்டும். இது பூச்சிக்கொல்லிகளை குறைக்க உதவும்.

நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து திராட்சையை கழுவினால் பாக்டீரியா குறையும்.

நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து திராட்சையை ஊற வைத்தால் இரசாயனங்கள் நீங்கும்.

திராட்சையை 2-3 முறை ஓடும் நீரில் கழுவுவது நல்லது.

நீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைப்பதால் அழுக்குகள் நீங்கும்.

திராட்சையை மெதுவாக கைகளால் தேய்த்தால் மேல் தோலில் உள்ள இரசாயனங்கள் நீங்கும்.

மிகவும் சூடாக இல்லாமல், வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பிறகு மீண்டும் சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

திராட்சையை காம்புடன் கழுவ வேண்டும். பிரித்து கழுவினால் அதிக இரசாயனங்கள் உள்ளே செல்லும் வாய்ப்பு உள்ளது.

முடிந்தவரை இயற்கை முறையில் விளைவித்த திராட்சையை வாங்குவது நல்லது.