சர்க்கரை வியாதி இருக்கா..! கூடுதலாக வர வாய்ப்புள்ள ஆரோக்கிய பிரச்னைகள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மாரடைப்பு, கரோனரி தமனி நோய்கள், பக்கவாதம் போன்ற இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் ஆபத்து அதிகமாக இருக்கும்

நீண்ட காலமாக சர்க்கரை கட்டுக்குள் இல்லாவிட்டால் சிறுநீரகங்களில் உள்ள நுண்ணிய ரத்த நாளங்கள் சேதமடையும் நெஃப்ரோபதி எனப்படும் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது

நீரிழிவு கண் விழித்திரை ரத்த நாளங்களை பாதிக்கிறது நீரிழிவு ரெட்டினோபதி பார்வை மங்குதல் மற்றும் குருட்டுத்தன்மை கூட ஏற்பட வாய்ப்புள்ளது

ரத்தத்தில் சர்க்கரை நீண்ட காலம் அதிகமாக இருந்தால் நரம்புகள் பாதிக்கப்பட்டு நீரிழிவு நரம்பியல் நோய் வரலாம் இதன் காரணமாக கால்களில் உணர்வின்மை எரிச்சல் மற்றும் மரத்துப்போதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இந்த இரண்டு பிரச்சனைகளும் சேர்ந்து இதயம் மற்றும் சிறுநீரகங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன

ரத்த நாளங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் மூளைக்கு ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்

நரம்புகள் மற்றும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் பாதங்களில் உள்ள காயங்கள் விரைவில் ஆறாமல் போகலாம் சிறு காயங்கள் கூட கடுமையான தொற்றுகளுக்கு வழிவகுக்கலாம்

சர்க்கரை நோய் நோய் எதிர்ப்பு சக்தி மீது தாக்கம் ஏற்படுத்தலாம் இதனால் தோல் சிறுநீர்ப்பாதை ஈறுகள் போன்ற பகுதிகளில் தொற்றுகள் அடிக்கடி வர வாய்ப்புள்ளது

டைப்2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நான்ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ் NAFLD ஏற்படும் ஆபத்து அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

டயாபெட்டிஸ் உள்ளவர்களுக்கு ஈறு வீக்கம் தொற்றுகள் பற்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் அதனால்தான் வாய் சுகாதாரத்தில் சிறப்பு கவனம் தேவை

நீரிழிவு நோய் உள்ள அனைவருக்கும் இந்த பிரச்சனைகள் வரும் என்று அர்த்தமல்ல ஆனால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது