மழைக்காலத்தில் வரும் நோய்கள்? இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்

Published by: ராஜேஷ். எஸ்

சளி, இருமல்

ஈரப்பதம் அதிகரிப்பதாலும், வெப்பநிலை மாற்றங்களாலும் வைரஸ் தொற்றுகள் அதிகமாகும். இதனால் சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் அடிக்கடி தோன்றும்.

டெங்கு

மழைக்காலத்தில் தேங்கிய நீரில் கொசுக்கள் வேகமாக பெருகும் ஏடிஸ் கொசு கடிப்பதால் டெங்கு வரும். அதிக காய்ச்சல், தலைவலி, தசை வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள்.

மலேரியா

கொசுக்கள் மூலம் பரவும் மற்றொரு ஆபத்தான நோய் மலேரியா. குளிர் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் வியர்வை பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

டைபாய்டு

அசுத்தமான நீர் அல்லது உணவை உட்கொள்வதால் டைபாய்டு வரும் ஆபத்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதிக காய்ச்சல், வயிற்று வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வயிற்றுப்போக்கு

மழைக்காலத்தில் நீர் மாசுபாடு அதிகமாக இருப்பதால் வயிற்றுப்போக்கு, வயிற்று தொற்றுகள் சாதாரணமாக காணப்படுகின்றன. சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.

வைரல் காய்ச்சல்

இந்த சீசனில் வைரஸ்களின் பரவல் அதிகமாக இருக்கும். காய்ச்சல், உடல் வலிகள், சோர்வு, தலைவலி போன்ற அறிகுறிகள் வைரஸ் காய்ச்சலில் காணப்படும்.

பூஞ்சை தொற்றுகள்

அதிக ஈரப்பதம் மற்றும் வியர்வை காரணமாக தோலில் பூஞ்சை தொற்றுகள் அதிகரிக்கும். அரிப்பு, சிவப்பு திட்டுகள், தோல் உரிதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

லெப்டோஸ்பைரோசிஸ்

வெள்ள நீர் அல்லது அசுத்தமான நீருடன் தொடர்பு கொள்வதால் இந்த பாக்டீரியா நோய் வர வாய்ப்புள்ளது. காய்ச்சல். தசை வலி. வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

கண் வெண்படல அழற்சி (பிங்க் ஐ)

மழைக்காலத்தில் கண் தொற்றுகளும் அதிகரிக்கும். கண்கள் சிவத்தல், நீர் வடிதல், அரிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள்

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம், பூஞ்சைகளின் பாதிப்புகள் மற்றும் தூசுத் துகள்கள் ஆகியவை ஆஸ்துமா நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் அதிகரிக்கலாம்.

இந்த நோய்களின் அறிகுறிகள் உங்களுக்குத் தெரிந்தால் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.