தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விரைவில் தனது இலட்சக்கணக்கான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய வசதியை வழங்கவுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) திரும்பப் பெறுவதற்கு இனி நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை.

புதிய முறைமையின் கீழ் ஊழியர்கள் UPI ஐ பயன்படுத்தி நிமிடங்களில் தங்கள் நிதிகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மாற்றம் EPFO புதிய டிஜிட்டல் தளமான CITES 2.0 (EPFO 3.0) மூலம் செயல்படுத்தப்படும்.

அந்த முழு செயல்முறையும் முந்தையதை விட வேகமாகவும், எளிதாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.

தற்போது ஊழியர்கள் தங்கள் PF திரும்பப் பெறுவதற்காக நாட்கள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

பயனர்கள் தங்கள் UAN உடன் உள்நுழைந்து OTP மூலம் சரிபார்த்தால் போதும்

அவர்கள் UPI ID ஐ உள்ளிடுவதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் மாற்றப்படும்.

ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து அதிகபட்சமாக 75 சதவீதம் பணத்தை மட்டுமே எடுக்க முடியும்.

கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

தற்போது EPFOவில் ஏறக்குறைய 798 மில்லியன் உறுப்பினர்கள் மற்றும் 82 மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.