Krunal pandya : மேலும் 8 பேர் positive? கொரோனா பீதியில் இந்திய அணி..
அருண்மொழிவர்மன்
Updated at:
27 Jul 2021 11:58 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று மாலை, இரண்டாவது டி-20 போட்டி நடைபெற இருந்த நிலையில், இந்திய அணியைச் சேர்ந்த க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இன்று நடைபெற இருந்த போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.