Scotland: நாய்களை தற்கொலைக்கு தூண்டும் மர்ம பாலம்
ABP NADU
Updated at:
28 Feb 2022 04:53 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppScotland: மனிதர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் செய்திகள் உலகம் முழுவதும் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு வழக்கமான செயலாகிவிட்டது. வருத்தம்தான் ஆனால் ஆச்சரியமில்லை. ஆனால் நாய்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் செய்தி சற்று வியப்பாக இருக்கிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே அடுத்தடுத்து நாய்கள் இறப்பது மர்மமாகவே உள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல பாலம் (ஓவர்டவுன் பிரிட்ஜ்) ஒன்றில் இதுவரையில் 50 நாய்களுக்கு மேல் தற்கொலை செய்துள்ளது. அந்த பாலம் 50 அடி உயரம் கொண்டதாக உள்ளது. அதிலிருந்துதான் நாய்கள் குதித்து இறந்துள்ளன. இயற்கைக்கு அப்பாற்பட்டு விசித்திரமாக அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.