Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து நடத்தும் போர் காரணமாக உலகமே பதற்றத்தில் இருக்கும் வேளையில், இப்போரின் தாக்கத்தால் தங்கத்தின் விலை கிடுவென உயர்ந்திருக்கிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது பிப்ரவரி 28-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
புவிசார் அரசியலில் இதுபோன்ற பதற்றமான சூழல் ஏற்படும்போது முதலீட்டாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பான முதலீடாக தங்கத்தில் அதிகம் முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும்.
அவ்வாறே, தற்போது ஈரான் போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகம் முதலீடு செய்ததால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.
பிப்ரவரி 27-ம் தேதி 1,19,200-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், பிப்ரவரி 28-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 5,000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1,24,400 ரூபாய்க்கு விற்பனையானது.
அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பங்குச் சந்தை செயல்படாது என்றபோதிலும், நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது.
நேற்று தங்கம் விலை சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,26,200 ரூபாயாக உயர்ந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை நேற்று எகிறிய அதே வேகத்தில் இன்று சட்டென குறைந்திருக்கிறது.
கிராமுக்கு 115 ரூபாயும், சவரனுக்கு 920 ரூபாயும் தங்கம் விலை இன்று குறைந்திருக்கிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 1,25,820 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பாதுகாப்புகள் காரணமாக பொதுவாக விமானம் மூலாமாகத் தான் தங்கம் ஏற்றுமதி செய்யப்படும்.
இவ்வாறிருக்க, இந்தியாவுக்கு தங்கம் ஏற்றுமதி செய்யும் முக்கிய சப்ளையாராக இருக்கும் துபாயில், ஈரான் போரால் பாதட்டாமான சூழல் நிலவுகிறது.
இதனால், அங்கிருந்து இந்தியாவுக்கு தங்கம் ஏற்றுமதி குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.