Police vs Conductor : ”ஏட்டய்யா இவங்கள விடக்கூடாது! போலீஸுக்கே டிக்கெட்டா?” நடத்துநருடன் வாக்குவாதம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App”ஏட்டய்யா இவங்கள விடக்கூடாது! போலீஸுக்கே டிக்கெட்டா?” நடத்துநருடன் வாக்குவாதம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஒருவர் ஏறி டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஒருவர் ஏறியுள்ளார். இதனை அடுத்து நடத்துனர் அந்த காவலரிடம் டிக்கெட் கேட்டபோது அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே டிக்கெட் கிடையாது. என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து நடத்துனர் அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும் இல்லாத பட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து. அவர் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள் போக்குவரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் இலவசமா என கேட்டார். அவர் டிக்கெட் எடுக்கும் வரை பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் கடுமையாக அவதியுற்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் டிக்கெட் எடுக்க ஒப்புக்கொண்டதால் பேருந்தை மீண்டும் இயக்கின.