Thiruvannamalai: கொடுக்காத கடனுக்கு வட்டி கட்ட சொல்லும் வங்கி... விசாரணைக்கோரும் மக்கள்!

Continues below advertisement

Thiruvannamalai: திருவண்ணாமலை அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தில் உள்ள HH124 என்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 3800 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் அதிமுகவைச் சேர்ந்த மோகன் என்பவர் தலைவர் பதவி வகித்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு அறிவித்த மகளிர் சுய உதவி குழு கடன், பயிர்க்கடன், கரும்பு பயிர் கடன் ஆகியவற்றில் சுமார் 8 கோடி ரூபாய் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் மற்றும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மீது அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் பெயரில் நகைக்கடன், பயிர்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன் என பல்வேறு வகையில் இந்த கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அதிகாரிகள், உறுப்பினர்களுக்கே தெரியாமல் உறுப்பினர்கள் பெயரில் கடன் பெற்றுள்ளதாக போலி ரசீது போட்டு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram