பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து

Continues below advertisement

பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு மதுபோதையில் காரில் சென்ற 6 நண்பர்கள் விபத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை தெற்குத் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தளபதி (36), போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி. தளபதிக்கு பிறந்த நாள் என்பதால் நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் தமிழரசன் (27), நிதீஷ் (25), சுதர்சன் (21), நரேன் (18), அபினேஷ் (21) ஆகிய ஆறுபேரும் ஒரே காரில் திருவையாறுக்கு சென்றுள்ளனர். காரை தமிழரசன் ஓட்டிச் சென்றார். தளபதியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருவையாறில் 6 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் திருவையாறில் இருந்து காரில் தளபதி உட்பட 6 பேரும் அம்மன்பேட்டைக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில் கண்டியூர் அருகே சுற்று குளத்தான்கரை பகுதியில் கார் வேகமாக வந்த போது நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியுள்ளது.

இதில் காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் தளபதி மற்றும் தமிழரசன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மற்ற 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருவையாறு போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,பிறந்தநாள் அன்றே தளபதி இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola