Irfan baby gender reveal : SORRY சொன்ன இர்ஃபான்’’ஆனா ஒரு கண்டிஷன்’’சுகாதாரத்துறை அதிரடி!
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSORRY சொன்ன இர்ஃபான்’’ஆனா ஒரு கண்டிஷன்’’சுகாதாரத்துறை அதிரடி!
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துறை இயக்குநகரத்திற்கு நேரில் சென்று மன்னிப்பு கோரியுள்ள நிலையில் சுகாதாரத்துறை அவருக்கு கண்டிசன் ஒன்று போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Irfan views YouTube channel மூலம் பிரலமானவர் இர்ஃபான். இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில், இவரது மனைவி ஹசீஃபா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இதனிடையே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று பாலினத்தை தெரிந்து கொண்டு அதனை அறிவிக்கும் செலிபிரேஷன் வீடியோவையும் பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இர்ஃபானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளில் குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து கொள்வதில் தவறில்லை. Gender reveal party என வைத்து பாலினத்தை சொல்லும் வழக்கம் தற்போது பரவலாக இருக்கிறது. இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வதும், அதனை அறிவிப்பது சட்டப்படி குற்றமாகும். மறைமுகமாக இதனை செய்யும் மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை இர்ஃபானிடம் விளக்கம் கேட்டிருந்தது. வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்தநிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துறை இயக்குநகரத்திற்கு நேரில் சென்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரிடம் இர்ஃபான்
மன்னிப்பு கடிதம் வழங்கியுள்ளார்
சென்னை டி.எம்.எஸ் வளாகத்திற்கு நேரடியாக சென்று மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரை சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுத்து மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இர்ஃபானுக்கு நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதாவது கருக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இர்ஃபான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் கருக்கலைப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் சுகாதாரத்துறை இர்ஃபான் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன