
Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICE
எதிரிகளை தாக்கும் போது பாம் போட்டு நிலைகுழையச் செய்பவர், 8 போலிஸ் ஸ்டேசன் மீது வெடி குண்டு வீசி காவல்துறையை மிரட்டி ரவுடீசத்தை கையில் எடுத்தவர், நாட்டு வெடிகுண்டு போடுவதில் கில்லாடியாக வலம் வந்ததால் பாம் என்று தோஸ்துகளால் செல்லாமாக அழைக்கப்பட்டவர் தான் A + கேட்டகிரி ரவுடி பாம் சரவணன்.
தனது அண்ணன் தென்னரசு மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்க பக்காவாக ஸ்கெட்ச் போட்ட சுற்றி வந்த பாம் சரவணனை ரேடாரில் கவனித்து வந்த தமிழ் நாடு போலீஸ் சுட்டுப்பிடித்திருக்கும் சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தன் அண்ணனை பார்த்து ரவுடி ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட சரவணன் கடந்த 1998 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார். அதிலிருந்து தான் தொடங்குகிறது இவரது ரவுடீசம். மற்ற ரவுடிகளை போல் கையில் அருவாள்,காத்தி எல்லாம் இவர் வைத்துகொள்வதில்லை இவருடன் எப்போதும் இருப்பது நாட்டு வெடிகுண்டுகள் தான். இந்த நாட்டு வெடிகுண்டுகளை இவரே உருவாக்கி செய்த சம்பவங்கள் ஏராளம்.
வெடிகுண்டுகள் வீசி பல கொலைகளை செய்த சரவணன் போலிஸ் ரெக்கார்டில் பாம் சரவணன் என்ற பெயருடனே வலம் வருகிறார். பிரபல ரவுடியாக இருக்கும் இவரது அண்ணன் தென்னரசு வட சென்னையின் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். தனக்கு எல்லா சூழ் நிலைகளிலும் பக்கபலாம இருந்த இவரது அண்ணன் தென்னரசுவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் குரூப் கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தனது அண்ணன் கொலைக்கு பலிக்கு பழி வாங்க வேண்டும் என்று காத்திருந்த பாம் சரவணன் அவருடைய அண்ணிக்கு சத்தியம் செய்து கொடுத்தது போன்றே அண்ணனின் நினைவு நாளில் வசென்னை பட்டினம்பாக்கதில் இருந்த ஆற்காடு சுரேசை தனது கேங்கை வைத்து படுகொலை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி நகேந்திரன் இந்த கொலைக்கு பலிவாங்க வேண்டும் என்று பாம் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இந்த கும்பல் தான் கைதாகி இருக்கிறது.
தனது அண்ணன் தென்னரசுவையும், உயிருக்கு உயிராக நினைத்த ஆம்ஸ்ட்ராங்கையில் அடுத்தடுத்து கொலை செய்த ஆற்காடு சுரேஷ் தம்பி நாகேந்திரன் மற்றும் அவரது குழுக்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று பாம் சரவணம் திட்டம் தீட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் உளவுத்துறையின் மூலம் சென்னை போலீசாருக்கு கிடைக்க இதை இப்படியே விட்டல் சரிப்பட்டு வராது இந்த கேங் வாரை எப்படி தீர்த்து கட்ட வேண்டும் என்று நினைத்த போலீசார் பாம் சரவணனை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்தது.
இந்த நிலையில் தான் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட முல்லை நகர் சுடுகாடு பகுதியில் உள்ள கூட்செட் ரோட்டில் பாம் சரவணன் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு சீக்ரட் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பாம் சரவணனை போலீசார் பிடிக்க முயன்ற போது தனது கையில் வைத்திருந்த வெடிகுண்டுகளை காவல் துறையினரை நோக்கி வீசியிருக்கிறார். அதோடு அங்கிருந்த காவலர் ஒருவரை கத்தியால் வெட்டி தப்பியோட முயன்ற பாம் சரவணனை தற்காப்புக்காக கவல்துறையினர் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாம் சரவணன் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.