
Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்
தாம்பரத்தில் பெண் போலீஸிடம் 4 சவரன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் வழிப்பறி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில் அவர்கள் வந்த பைக்கும் திருட்டு பைக் என அம்பலமாகியுள்ளது.
நேற்று இரவு 7.30 மணியளவில் மறைமலை நகரில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் வாங்குவது போல் கடைக்கு வந்த இருவர் கடையில் இருந்த ராஜேஸ்வரி என்கிற பெண்ணிடம் 4 சவரன் செயினை பறித்து சென்றனர். கடைக்கு வந்த இருவரும் வடமொழி கலந்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மணிமங்கலம், பீர்க்கன்காரணை, சேலையூர், அகிய இடங்களிலும் அதே நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் அவர்கள், தாம்ப்ரம் காந்தி சாலையில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக உள்ள் இந்திரா என்பவரிடம் 5 சவரன் பறித்துள்ளனர்,
அன்று ஒரே இரவில் இருவரும் மொத்தமாக 20 சவரனுக்கு மேல் பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது. இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் இரவு 10.30 மணியளவில் தாம்பரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது பல்சர் பைக்கில் அதே அடையாளத்துடன் மாஸ்க் போட்ட இரண்டு நபர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்,அப்போது அந்த வழிப்பறி கொள்ளயர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்,
இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் வந்த இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என கண்டறியப்பட்டுள்ளது.இந்நிலையில் தப்பியோடிய கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் பெண் போலீசிடம் அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.