Seeman Speech : அநாகரிகமாக பேசிய சீமான்.. கொந்தளித்த திருச்சி SP!

Continues below advertisement

சீமான் போலீஸ் அதிகாரிகள் குறித்து கொச்சைப்படுத்தி ஒருமையில் அநாகரிகமாக சீமான் பேசியதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார்  சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தனது 'X' வலைதளப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகியும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டவருமான காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஆடியோவை, நாம் தமிழர் கட்சியினர் பலரும் இதை சீமான் பேசவில்லை என்றும், இது ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி வதந்தியை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் கூறி மறுப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் காளியம்மாள் இதுகுறித்து எந்தவொரு மறுப்போ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த ஆடியோவுக்கு காரணம் திருச்சி எஸ்.பி.தான் என்று சீமான் மறைமுகமாக பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. போலீஸ் குறித்து அநாகரிகமாக பேசிய சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீஸ் அதிகாரிகள் குறித்து கொச்சைப்படுத்தி ஒருமையில் அநாகரிகமாக பேசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலானது. இந்த வீடியோவை ஒருவர் பகிர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமாரை டேக் செய்திருந்தார்.

இந்நிலையில், சீமான் பேசிய வீடியோவை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருச்சி எஸ்.பி. வருண்குமார், சீமானின் அநாகரிகமான, அவதூறு பேச்சுக்கு விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மீதும், கோர்ட் மீதும் எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. பொது மேடையில் இவ்வாறு அநாகரிகமாகவும், கொச்சையாகவும் பொய்களை பேசுவதை பொதுமக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram