Senthil Balaji Hospitalised : மீண்டும் நெஞ்சு வலி! ICU-ல் செந்தில் பாலாஜி! தீவிர சிகிச்சை

Continues below advertisement

நெஞ்சு வலி காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. தொடர்ந்து முயற்சித்தும் அவருக்கு ஜாமின் கிடைக்காத நிலையில், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரான பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் செந்தில் பாலாஜிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மதியம் உணவு சாப்பிட்ட பிறகு நெஞ்சு வலிப்பதாக சிறைத்துறை அதிகாரிகளிடம் சொல்லியதாக தெரிகிறது. சிறை மருத்துவர்கள் முதலுதவி அளித்த பிறகு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர்  மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்த பின் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவர் எனக் கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram