Rahul Gandhi on Modi : ”பகவான் சொன்னார் போனேன்” மோடியை வச்சு செய்த ராகுல்! குலுங்கிய அரங்கம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து தப்புவதற்காகவே கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று பிரதமர் மோடி பேசி வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் ராஷ்ரிய ஜனதா தலைவர் தேஜஸ்வி யாதவ் இணைந்து பங்கேற்றார்கள். அப்போது பேசிய ராகுல் காந்தி. இதுவரை அம்பானி, அதானி உள்ளிட்ட 22 பெயரை மோடி மன்னர்களாக மாற்றியுள்ளதாகவும் அவர்களுக்காகவே மோடி செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் மோடி தன்னை கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று கூறிக் கொள்வது பற்றியும் அவர் விமர்சித்தார் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமலாக்கத்துறை அதானி குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பும்போது கடவுள் சொல்லியே அதானிக்கு உதவியதாக சொல்லிவிடுவார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்
நாட்டை பிளவுப்புப்படுத்தும் வகையிலான பேச்சுகளை மோடி தவிர்க்க வேண்டும் என்ற தெரிவித்த ராகுல் காந்தி பாஜக ஆட்சியில் எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்பதை மோடி சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்