JP Nadda on Kerala issue : ”யார காப்பாத்துறீங்க பினராயி?”அடுத்தது உங்க கட்சி தான்!பகீர் கிளப்பிய நட்டா
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகேரளா சினிமாவில் பாலியல் சர்ச்சை விவகாரம் ஹேமா கமிட்டி ரிப்போர்டுக்கு பிறகு பெரிய அதிர்வலைகளை கிளப்பியுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா இந்த விவகாரத்தில் கேரளா அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை கேரள அரசு பாதுக்காக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஹேமா கமிட்டி ரிப்போர்ட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகைகள் அடுத்தடுத்து தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை சொல்லி வருகின்றனர். இதனால் மோகன் லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் கேரள அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பாலகாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அப்போது பேசிய அவர் கேரளா பாலியல் சர்ச்சை விவகாரத்தில் ஹேமா கமிட்டி அளித்த ரிப்போர்ட்டில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது, இதை கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது என்றும் இது குறித்து உண்மையை கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
ஹேமா கமிட்டி அறிக்கை கொடுத்தும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க தாமதம், இந்த விவகாரத்தில் கேரள அரசை நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது? உங்கள் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதால் தான் நீங்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க பார்க்கிறீர்கள் என்று கேரள முதலவ்ர் பினராயி விஜயனை பார்த்து கடுமையான விமர்சனத்தை ஜேபி நட்டா எடுத்து வைத்துள்ளார்.
ஏற்கெனவே ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டினால் கேரள சினிமாவில் பெரிய சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில் தற்போது இதே விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஜேபி நட்டா பேசியுள்ளது கேரள அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை கிளப்பியுள்ளது.