DMK Cadre vs Police |”முடிஞ்சா இப்ப கைது பண்ணு”Dress-ஐ கழட்டி சவால்!திமுக பிரமுகர் அட்டூழியம்..

Continues below advertisement

மணல் திருட்டில் ஈடுப்பட்டு போலீசிடம் வசமாக சிக்கிக்கொண்ட திமுக பிரமுகர் ஒருவர், வடிவேலு காமெடியில் வருவது போன்று தன்னை பிடிக்க வீட்டுக்கு போலீஸ் வந்ததும், கைது செய்ய படுவதை தடுக்க ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாய் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரை காப்பாற்ற குழந்தைகளை பயண்படுத்தி அவருடைய மனைவி போடும் டிராமாவின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது..

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி  பகுதியில் அமைந்துள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் ஒரு கும்பல் மணல் திருடி கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இரவு ரோந்தில் இருந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது ஜேசிபி மற்றும் இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு சிலர் மணல் திருடி கொண்டிருந்துள்ளனர், காவல்துறையை கண்டதும் பதறி அடித்துக்கொண்டு அங்கேயே தங்களுடைய வாகனத்தை போட்டு விட்டு தலை தெரிக்க ஓடிள்ளனர்.

இந்நிலையில் ஜேசிபி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த போலீஸ் மணல் திருட்டில் ஈடுபட்டது திமுகவை சேர்ந்த கங்கை ஆதித்தன் என்று உறுதி செய்து, அவரை கைது செய்ய இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். 

அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி குழந்தைகளை பயண்படுத்தி காவல்துறையின் கைது நடவடிக்கையை தடுக்க முயன்றனர். குறிப்பாக அவர் குற்றம் செய்யவில்லை, என்ன கொலையா செஞ்சுட்டாரு, இத்தனை மணிக்கு வந்து கதவை உடைக்குறீங்க? நீங்கள் கைப்பற்றியுள்ள அந்த வாகனத்தை நாங்கள் எப்போது விற்று விட்டோம், குழந்தைகளா நீங்க போய் போலீஸ் ஜீப் மின்னாடி படுத்துக்கோங்க, என் புருஷன நீங்க கொலை செய்ய நான் விட மாட்டேன் என்று டிசைன் டிசைனாக தடுத்தார். 

ஆனால் விடாத போலீஸ் கூட்டத்தை கலைத்து கதவை உடைத்தனர், அப்போது தான் திமுக பிரமுகர் கங்கை ஆதித்தன் இன்னோரு புதிய யுத்தியை கையிலெடுத்தார். டிரஸ்ஸோட இருந்தா தானே பிடிப்பிங்க, என்று தன்னுடைய ஆடைகளை அனைத்தையும் அவிழ்த்துவிட்டு, நிர்வாணமாக நின்றுக்கொண்டு காவல்துறையினர் கைது செய்வதை தடுத்தார்.

இந்நிலையில் பல மணி நேர போராட்டதிற்கு பிறகு அவரை கைது செய்தது போலீஸ், இதனால் அங்கே பரபரப்பான சூழல் நிலவியது. இவர் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஒட்டுமொத்த நிகழ்வின் போதும் சிறு குழந்தைகள் என்ன நடக்கிறது என்று புரியாமல், அழுத வண்ணம் நின்றுக்கொண்டிருந்த காட்சிகள் வேதனையானது. இந்நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram