Jayakumar Death News | ஜெயக்குமார் மனைவியிடம் துருவி துருவி விசாரணை CBCID-ன் அடுத்த டார்கெட்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜெயக்குமார் மனைவியிடம் துருவி துருவி விசாரணை CBCID-ன் அடுத்த டார்கெட்!
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த தொடர்பாக அவரது மனைவி மகன்கள் மற்றும் மகள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 5 3/4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தில் கடந்த நான்காம் தேதி பாதி எரிந்த நிலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே பி கே ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று 3வது நாளாக விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது அவரது மனைவி ஜெயந்தி மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் மகள் கேத்தலின் ஆகியவரிடம் பிற்பகல் 12.50 மணிக்கு விசாரணை துவங்கியது.
இந்த விசாரணையின் போது சிபிசிஐடி கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அவர்கள் நான்கு பேரும் அளித்த வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மாலை 6:45 மணிக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 6 மணி 45 நிமிடத்திற்கும் மேலாக அவர்கள் நான்கு பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் முதல் கட்ட விசாரணை முடிவடைந்தது..