Rahul Gandhi Bjp MLA | ”ராகுலை அறையணும்! சிவன் கண்ண தொறந்தா..” பாஜக MLA சர்ச்சை பேச்சு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியை நாடாளுமன்றத்துக்குள் வைத்து அறைய வேண்டும் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பேசியிருப்பது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சிவன் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தால், அவர் சாம்பலாகிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்துக்கள் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், வெறும் வெறுப்பு, வன்முறை, உண்மைக்கு புறம்பானவற்றை மட்டுமே பேசுவதாக பாஜகவினரை தாக்கி பேசினார். மேலும் சிவனின் படத்தை எடுத்துக்காட்டி, இதில் உள்ள பாம்பு தைரியத்தையும், திரிசூலம் அகிம்சையையும், அபயமுத்ரா காங்கிரஸ் கட்சியின் சின்னத்தையும் குறிப்பதாக பேசியதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்த மோடி “ஒட்டுமொத்த இந்துக்களை வன்முறையாளர்கள் என்று சொல்வது மிகவும் தீவிரமானது என்றார். பாஜக மட்டுமே இந்துக்கள் கிடையாது என இந்தியா கூட்டணியினர் கொந்தளித்தனர்.
இந்தநிலையில் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ பாரத் ஷெட்டி ராகுல்காந்தியின் இந்துக்கள் பற்றிய பேச்சு தொடர்பாக விமர்சனம் செய்தது சர்ச்சையில் சிக்கியது. ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும் என்று சொல்லியதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். இந்துக்களைப் பற்றி என்ன சொன்னாலும் இந்துக்கள் அமைதியாகக் கேட்பார்கள் என்று அவர் நினைக்கிறார். இந்துக்களுக்கு எதிரான கொள்கையை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர் என்றும் எம்.எல்.ஏ விமர்சித்துள்ளார்.
மேலும் சிவன் படத்தை எடுத்துக்காட்டியது தொடர்பாக பேசிய அவர், ‘சிவன் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தால், ராகுல் சாம்பலாகிவிடுவார் என தெரிவித்துள்ளார். அதேபோல் இடத்திற்கு ஏற்றமாதிரி ராகுல் தனது கொள்கைகளை மாற்றி கொள்வதாகவும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக இருக்கக் கூடிய ராகுல்காந்தியை நாடாளுமன்றத்தில் வைத்து அறைய வேண்டும் என பேசிய பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து வருகின்றனர்.