Mohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபழனி பஞ்சாமிர்தம் குறித்தி சர்ச்சைக்குரிய
கருத்துகளை பேசிய காரணத்திற்காக இயக்குநர் மோகன் ஜி இன்று சென்னை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருப்பதி எழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு , பன்றிக் கொழுப்பு , மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் கலக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து மோகன் ஜி கருத்து தெரிவித்திருந்ததிருப்பதி என்பது வெறும் ஆந்திராவுக்கு மட்டுமானது இல்லை. உலகம் முழுக்க இருக்கும் இந்துக்களுக்கு சொந்தமானது. கிட்டதட்ட 370 வருடங்களாக இந்த லட்டு பாரம்பரியம் இருந்து வருகிறது. அதனால் இதை கேள்வி கேட்பது எல்லா இந்துக்களுக்கும் இருக்கு. இந்த விவகாரத்தில் முழு பொறுப்பேற்க வேண்டியது திருப்பதி தேவஸ்தானம் தான். இதே இடத்தில் யாராவது விஷம் கலந்திருந்தார்கள் என்றால் என்ன செய்திருக்க முடியும். திருப்பதி தேவஸ்தானத்தை கலைக்க வேண்டும் . இதே விஷயம் வேறு ஒரு மதத்தில் நடந்திருந்தால் இது ஒரு பெரிய பிரச்சனை ஆகியிருக்கும் .
இதுபற்றி வெளிப்படையாக யாராவது எதிர்ப்பை தெரிவித்தார்களா. ஆனால் சால்வையை போர்த்திக்கொண்டு கோயிலுக்கு சென்றவர்கள் ஏராளம் . திருப்பதி என்ன ஏழை கோயிலா? தரமான நெய்யை வாங்கி லட்டு தயாரிக்கலாமே என்று கூறியிருந்தார்.
இதே போல ஒரு பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பெரிய கோயிலில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்படுவதாக எனக்கு செய்திகள் வந்தன. ஆனால் அந்த பிரச்சனையை வேறு ஏதோ ஒரு பிரச்சனையாக திசை திருப்பி விட்டார்கள். திட்டமிட்டே பழநி கோயிலில் வேலை செய்பவர்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்குவதாக எனக்கு தகவல்கள் வந்தன. இந்த மாதிரியான விஷயங்கள் நிறைய இடங்களில் நடக்கிறது. என்னிடம் போதுமான ஆதாரம் இருந்திருந்தால் நானே பத்திரிகையாளர்களை சந்தித்திருப்பேன். இந்த மாதிரியான விஷயங்களில் இன்னும் அதிக கவனம் தேவை என்பதுதான் என்னுடைய கோரிக்கை. இதனை அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோகன் ஜி தெரிவித்தது சர்ச்சையை கிளப்பி இருந்தது.
மோகன் ஜி தெரிவித்த இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்த நிலையில் காவல் துறையினர் இன்று காசிமேடில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செயதனர். மேலும் அவரை எந்த பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.