Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோ

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் சமையல் பாத்திரங்களை மாணவிகளே விளக்கி கழுவும் வீடியோ வெளியாகி பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை அருகே உள்ள இன்னாடு கிராமத்தில்  அரசு மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த  பள்ளியில் காலை உணவு அருந்திய பின் பள்ளி மாணவிகள் இட்லி பாத்திரங்களை கழுவிடும் வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து மாணவிகளை பாத்திரங்களை கழுவிடும் பணியில் ஈடுபட வைத்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இது போன்ற பணிகளை மேற்கொள்ள அந்த உண்டு உறைவிட பள்ளியில் பணியாற்றும் சமையல் மற்றும் சமையல் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி மாணவிகள் சமையல் பாத்திரங்களை கழுவும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola