Madhya Pradesh: குரங்குக்கு இறுதிச் சடங்கு..1500 பேருக்கு விருந்து..கடுப்பில் போலீஸ்
ABP NADU
Updated at:
12 Jan 2022 04:35 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMadhya Pradesh: மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தில் டிசம்பர் 29 அன்று குளிரால் இறந்த லாங்கூர் வகை குரங்கின் இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக சுமார் 1,500 பேருக்கு கிராம மக்கள் நேற்று விருந்து அளித்தனர். இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, கிராம மக்கள் பணம் சேகரித்து, அறிவிப்பு அட்டைகள் அச்சிட்டு 1,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். ஒரு பெரிய பந்தலின் கீழ் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக அமர்ந்து உணவு உண்ணும் விருந்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது.