திருமாவை அவதூறாக பேசிய காயத்ரி.. அதிரடி காட்டிய நீதிமன்றம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,எம்.பி., குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராமை 12 ஜூலை 2021 அன்று நேரில் ஆஜராகச் சொல்லி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.