Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்பு
Download ABP Live App and Watch All Latest Videos
View In App’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்பு
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வுக்கு 100-க்கும் மேற்பட்டோருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தேர்வு மையம் வாயிலில் தேர்வெழுத வந்த பெண்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி காவல்துறையில் ஊர் காவல் படை வீரர்களுக்கான உடற் தகுதி தேர்வு முடிவடைந்த நிலையில் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்து தேர்வு இன்று காலை நடைபெற்றுது.
12 மையங்களில் 500 பதவிக்கு 4,429 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 12 மணிக்கு முடிந்தது.
தேர்வர்கள் 9:30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தாமதமாக வந்துள்ளனர்.
இந்நிலையில் நேரம் முடிந்துவிட்டதாக கூறி தேர்வு மையம் கேட் மூடப்பட்டது. இந்நிலையில் தேர்வு மையம் வாசலில் நின்று அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசலால் தான் நாங்கள் தாமதமாக வந்ததாக அவர்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..