Farmer Slaps Officer |அரசு அலுவலகத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி!”எவ்ளோ நாள் WAIT பண்றது”

Continues below advertisement

நிலத்தை கையகப்படுத்தி இழப்பீடு கொடுக்காமல் இழுத்தடித்த அரசு அதிகாரியை அலுவலகத்திலேயே வைத்து விவசாயி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் சாலை மற்றும் நதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக விவசாயிகள் சிலரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக சொல்கின்றனர். பசப்பா என்ற விவசாயி ஒருவரிடம் வாங்கிய 4 ஏக்கர் நிலத்திற்கான இழப்பீடு தொகையை இதுவரை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர்.

இத்தனை நாட்களாக காத்திருந்த விவசாயி சம்பவத்தன்று பாகல்கோட் நகர வளர்ச்சி ஆணைய அலுவலகத்திற்கு சென்ற போது அவருக்கும் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விவசாயி அதிகாரியை செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்களின் குடியிருப்புக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை எதிர்த்து தலித் சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பினர் அலுவலகத்தில் போராட்டத்தில் நடத்திய நேரத்தில், விவசாயி அதிகாரியை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தநிலையில் விவசாயியின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்ய வேண்டும் என அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola