Dharmapuri Murder | கடையில் இளைஞர் கொலை! பதறவைக்கும் CCTV காட்சி! நடந்தது என்ன?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதருமபுரியில் பிரபல பிரியாணி கடையில் பணிபுரிந்த இளைஞரை கும்பல் சுத்துப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி இலக்கியம்பட்டியில் கடந்த 6 -ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட பிரபல பிரியாணி ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் கிரில் மாஸ்டராக தருமபுரி வி ஜெட்டி அள்ளியை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் வழக்கம்போல் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் இரவு 10 மணிக்கு ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பாசாங்கு காட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த ஓட்டலில் இருந்த ஊழியர்கள் தடுக்க முற்பட்டபோது அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்து விலகி நின்றனர். உடனடியாக கத்தியால் குத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின் அவரிட்ட உத்தரவின்பேரில் மோப்பநாய் ரேடவ் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? எதற்காக இந்த இளைஞரை கொலை செய்தனர் இதன் பின்னணியில் யார் யார் இருக்கின்றனர் காதல் விவகாரமா என்பது குறித்து கொலையாளிகளை கைது செய்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும். தர்மபுரி , சேலம் முக்கிய சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே கிரில் மாஸ்டர் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தர்மபுரி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.