Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சி

பூந்தமல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஐந்து பேர் காயமடைந்தனர். விபத்துக்குன்னான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூந்தமல்லி சக்தி நகரில் இன்று வீட்டு உபயோக சிலிண்டர் வெடித்தது விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமார் என்பவரின் வீட்டில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர். 

வீட்டில் சிலிண்டரை பயன்படுத்தி கொண்டு இருந்த போது, பயங்கர சட்டத்துடன் சிலிண்டர் வெடிப்பதாக கூறப்படுகிறது. சிலிண்டர் வெடித்த அதிர்ச்சியில் வீட்டில் ஒரு புறம் சுவர் நொறுங்கியுள்ளது. மேலும் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அருகில் இருந்த இரண்டு குழந்தை உட்பட ஏழு பேருக்கு பலத்த காயம் அடைந்துள்ளது. 

சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு துறை நோக்கி தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக சம்மந்த இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு துறையினர் சிலிண்டரை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் குமார், ஜெகன், சரஸ்வதி, யுவராஜ், ஷீலா, ரிஷி மற்றும் நீலக்குமார் ஆகிய ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் விபத்தால் காயம் அடைந்த ஏழு பேரும்,  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola