School Students reels | பேருந்து டாப்பில் ஏறி REELS.. பள்ளி மாணவர்கள் அட்ராசிட்டி!

 

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகாத்தால் பொதுமக்களுக்கு இடையூறு  ஏற்ப்படுத்தும் வகையில்  சாலையில் நின்றிருந்த மாநகரப்பேருந்து ஏறி ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் செய்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 1000 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கால்  , ரூட்டு தல உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இன்ஸ்டா கிராம் , பேஸ்புக் லைக் மோகத்தில் பல்வேறு சேட்டைகள் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் மாலை நேரத்தில் பூவிருந்தவல்லி - தாம்பரம் செல்லும் அரசு பேருந்தை பூந்தமல்லி ரெடி பாஸ்கெட் அருகே வழி மறித்து   மேற்கூரையின் மீது ஏறி ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்துள்ளனர். நடுவழியில் பேருந்தை மடக்கி மேற்கூரையில் ஏறியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதாக தொடர் புகார் எழும் நிலையில் , காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் செயலை கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் இதனை கண்டும் காணாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்ந்து , பள்ளி மாணவர்கள் அடிக்கடி அரசு பேருந்து வழிமறித்து பேருந்தின் மேற்கூறை மீது அமர்வதும் ஜன்னலை பிடித்து தொங்கிக்கொண்டு செல்வதும் போன்ற பொதுமக்களை முகம் சுளிக்கும் செயல்களிலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவது  தொடர் கதையாகி வருவதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola