சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

Continues below advertisement

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக-விலிருந்து விலகப்போவதாக பேச்சு அடிபட்ட நிலையில், தற்போது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை விஜயபாஸ்கர் ராஜினமா செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

சட்டமன்றத்தில் இபிஎஸ்ஸின் உத்தரவை மீறி தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்களில் சி.விஜயபாஸ்கரும் ஒருவர்.

இதனால், கட்சியில் இவரின் புதுக்கோட்டையை மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

பின்னர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உட்பட 21 எம்.எல்.ஏ-க்களை மன்னித்து விட்டதாகவும், அவர்கள் மீதான தகுதி நீக்க கோரிக்கையை திரும்பப்பெறுவதாகவும் இபிஎஸ் சார்பில் அளிக்கப்பட்ட கடிதம் சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இருப்பினும், விஜயபாஸ்கர் இபிஎஸ்ஸிடமிருந்து ஒதுங்கியிருந்தார். இதற்கிடையில், அவர் திமுகவில் இணையப்போவதாகவும், உடனடியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.

மேலும் விஜயபாஸ்கர் இன்று எக்ஸ் தளத்தில், "தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’

உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?

உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" என்று இபிஎஸ்ஸை விமர்சித்து, கட்சியிலிருந்து விலகப்போவதாக மறைமுகமாகப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், விஜயபாஸ்கர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து, தனது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா கடிதத்தை சமர்பித்திருக்கிறார்.

இதனால், விஜயபாஸ்கர் அடுத்து கட்சியிலிருந்து விலகி திமுக-வில் சேர்வாரா அல்லது தவெக-வில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola