Chengalpattu girl murder : 17வயது சிறுவனின் கொடூர செயல்.. ஸ்மார்ட் போனில் நிரம்பியிருக்கும் வக்கிரம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆபாச வீடியோக்கள்..ஆபாச படங்களுக்கு அடிக்ஷன் : பள்ளிச் சிறுமியை கல்லால் அடித்துக்கொன்ற 17 வயது சிறுவன்..! செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகள் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த வெளியே சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எனினும், சிறுமி குறித்து தகவல் இல்லாததால், சதுரங்கப்பட்டினம் போலீஸில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதே கிராமப்பகுதியில் ஒதுக்குப்புறமான முட்புதரில் சிறுமியின் உடல், தலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், சிறுமியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.