SAREE ஃபோட்டோ அனுப்பு” பெண்களிடம் எல்லைமீறிய SI... வெளியான ஆபாச மெசேஜ்

Continues below advertisement

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பழனி தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துள்ளன. புடவையுடன் ஃபோட்டோ அனுப்பு என அவர் பெண்களிடம் அநாகரிகமாகப் பேசிய வாட்ஸ்அப் சாட்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தவர் ராஜகோபால். காவல் நிலையத்திற்குத் தனது தனிப்பட்ட பிரச்சினை குறித்துப் பாதுகாப்பு தேடி வரும் பெண்களிடம் அநாகரிகமாகப் பேசுவதையும், அவர்களிடம் எல்லை மீறி நடப்பதையும் ராஜகோபால் வழக்கமாக வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர் தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் நேற்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகனால்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜகோபால் மீது அடுத்தடுத்து பல்வேறு  குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. 

இந்தநிலையில் அவர் பெண்களிடம் வாட்ஸ் அப்பில் செய்த உரையாடல்கள் தற்போது வெளியாகி அதிர வைத்துள்ளது. அதில் புடவையுடன் கூடிய புகைப்படத்தை அனுப்பு என்றும், அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்தபோது, "உன்னிடம் கேட்காமல் நான் வேறு யாரிடம் கேட்பது" என்றும் பேசியது அம்பலமாகியுள்ளது. பாதுகாப்பு கோரி காவல் நிலையத்திற்கு வந்த இன்னும் பல பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

அதனால் காவல் துறையினருக்குக் களங்கம் விளைவித்த SI மீது வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் போதாது என்றும், கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola