Theni: இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்கள் தேனியில்..! ஒருமுறையாவது சென்று வாருங்கள்..!

Theni Tourist Places: நீங்கள் தேனிக்கு சென்றால் ஒரு முறையாவது இந்த இடங்களுக்கு சென்று வாருங்கள்.

Continues below advertisement

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், மக்கள் தங்கள் குழந்தைகளுடன் டூரிஸ்ட் ஸ்பாட்களுக்கு செல்ல ப்ளான் செய்ய தொடங்கியுள்ளனர். இப்படி கோடை விடுமுறையை கழிக்க தேனிக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த இடங்களுக்கு சென்றுவிட்டு திரும்பிவிடுகின்றனர். ஆனால், இம்மாவட்டத்தில் அறியப்படாத பல இடங்கள் இருக்கின்றன. இயற்கை மாறாமல் இருக்கும் சுற்றுலா தலங்கள். நீங்கள் தேனிக்கு சென்றால் ஒரு முறையாவது இந்த இடங்களுக்கு சென்று வாருங்கள்.    

Continues below advertisement


சுருளி அருவி:

கம்பத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆன்மீக ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்குவதால் தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.

மேகமலை :

கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது மேகமலை. பச்சை பசேல் என மலைகள் காட்சியளிக்கும். இங்கு செல்ல தேனியில் இருந்து காரை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். மற்றொரு வழியாக சின்னமனூரில் இருந்து, அதிகாலை 4.30, காலை 6, மற்றும் காலை 10 மணிக்கு புறப்படும் உள்ளூர் பேருந்துகளிலும் செல்லலாம்.


சின்ன சுருளி அருவி :

இது மேகமலையிலிருந்து கீழே பாய்ந்து, புத்துணர்ச்சியை ஊட்டும் அருவியாக இருக்கிறது. இந்த சின்ன சுருளி அருவி ஆனது காலை 7:00 முதல் மாலை 5:00 வரை எப்படி குளிக்க அனுமதி உண்டு. இங்கு நண்பர்கள், குடும்பத்துடன் செல்லவும் ஏற்ற இடம்.  

சண்முகநதி அணை :

சண்முகநதி அணையானது பூசாரிகவுண்டன்பட்டி, அப்பிபட்டி, சுக்கங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, செப்பளக்கோட்டை ஆகிய வறண்ட நிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குகிறது. இந்த அணைக்கு மேகமலை மலையில் இருந்து தண்ணீர் வருகிறது. ராயப்பன்பட்டி, மேகமலைக்கு அருகே அமைந்துள்ளது இந்த இடம்.  


 கொழுக்குமலை தேயிலை தோட்டம் :

தேனி கொழுக்குமலை தேயிலை தோட்ட சுற்றுலா தலம், 1900 களின் முற்பகுதியில் ஸ்காட்டிஷ் தோட்டக்காரர் ஒருவரால் தேயிலை எஸ்டேட், சமகால கணினிமயமாக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்தி நிறுவப்பட்டது. மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த தேயிலை தோட்டத்திற்குள் நுழைய கட்டணம் ரூ.75 செலுத்த வேண்டும். காலை 7:00 முதல் மாலை 6:00 வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் அங்கேயே இருக்கும் கேரள மக்களுக்கு அது பெரியளவில் சுற்றுலா தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் சுற்றுலாதலங்கள் அவர்களுக்கு மாறுபாடான சூழ்நிலையாக உள்ளது. மூணாறு, தேக்கடி, வாகமன் உள்ளிட்ட பகுதிகளைப் பொறுத்தளவில் பசுமைப் பள்ளத்தாக்குகள், பெரும்பாலும் மூடுபனி, தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், அருவிகள், ஆகியவற்றுடன் சில்லென்ற பருவநிலையும் இருக்கும். 


ஆனால், இதே கோடைகாலங்களில் அங்கும் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் கேரள மாநிலத்தவர்களும் தேனி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகளாக வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கண்ணுக் கெட்டியதூரம் வரை விளைந்து கிடக்கும் பல்வேறு வகையான பூக்கள், நெல் வயல்வெளிகள், திராட்சை தோட்டங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அங்கிருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola