80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை வர்த்தக பகுதி BSNL மூலம் FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால் வசதியுடன் கூடிய ஒரு ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனை தொடக்கம்

Continues below advertisement

பேரிடர்காலங்களில் பயன்படுத்தும் வகையில் பிரத்யேகமாக BSNL சேட்டிலைட் போன் அறிமுகபடுத்தப்பட்டுள்ளதாக மதுரை வர்த்தக பகுதி பொது மேலாளர் தகவல்

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தில்  முதன்மை பொதுமேலாளர் லோகநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்..," மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்  மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை BSNL வர்த்தகப் பகுதியில் 4G சிம் விற்பனை அதிகரித்ததன் மூலமாக வருமானம் 12% அதிகரித்துள்ளது.  4G சிம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மதுரை BSNL மூலமாக FREEDOM 2.0 திட்டத்தில் 24 நாட்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடேட் கால், 100 SMS வசதியுடன் கூடிய ஒரு  ரூபாய்க்கு ஒரு 4G வசதி சிம் கார்டு விற்பனை நேற்று தொடங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி்வரை நடைபெறவுள்ளது என்றார்.

Continues below advertisement

கூடுதலாக 28 டவர்களில் அமைக்கப்பட்டுள்ளது 

BSNL மதுரை வர்த்தக பகுதியில் BSNL 990 இடங்களில் தனது சொந்த 990 மொபைல் டவர்கள்  34 USO மொபைல் டவர்கள் என 1,014 மொபைல் டவர்கள் மூலமாக 4G நெட்வொர்க் வழங்கப்பட்டுவருகிறது. திண்டுக்கல் மற்றும் காரைக்குடி ஆகியவற்றில் இதுவரை டவர்கள் இல்லாத பகுதிகளில் 34 டவர்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் கொடைக்கானல் ஆகியவற்றில் கூடுதலாக 28 டவர்களில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் பேரிடர் காலங்களில் கடற்கரை மற்றும் வனப்பகுதிகள் ஆகியவற்றில் தொலை தொடர்பு இல்லாத நேரங்களில் பயன்படுத்தும் வகையில் முதன்முறையாக BSNL சேட்டிலைட் போன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அரசு பயன்பாட்டுக்கு, தனியார் பயன்பாட்டுக்கு கட்டணம் வித்தியாசத்துடன் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.