கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது, இதற்கான தீர்வாக தடுப்பூசியை மருத்துவர்களும், அரசும் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கான கொரோனா தடுப்பூசி கிடைப்பதிலும் அதனை எங்கு பெறுவதிலும் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் வாட்ஸ் அப் இணைந்து mygov charbot என்ற சேவையை கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தடுப்பூசி மையங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான வசதியை இணைத்துள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 15 கோடியே 49 லட்சத்து 68 ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 40 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது. இது போன்ற அசாதாரண சூழலில் தான் இது போன்ற சேவைகள் பொதுமக்களுக்கு பயன்படும்.