இந்தியாவின் போட்டித்தேர்வு ஆணையம்(சிசிஐ) அக்டோபர் 25 அன்று கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் கையோங்கிய நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது.


நிறுவனத்தின் பயன்பாட்டுக் கட்டணக் கொள்கைகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை விடுத்து அதன் அப்ளிகேஷனை வாங்குவதற்கு கூகுள் பே வழியாகவோ அல்லது மூன்றாம் தரப்பு பில்லிங் முறை வழியாகவோ அணுகும் நுகர்வோர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று ஆணையம் அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.


அக்டோபர் 20 அன்றுதான் ஆண்ட்ராய்டு மொபைல் போன் சூழல் அமைப்பில் இயங்கும் பல சந்தைகளில் அதன் ஆதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு ஆணையம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. அடுத்த சில நாட்களிலேயே ஆணையம் இந்த இரண்டாவது நடவடிக்கையையும் எடுத்துள்ளது.


கடந்த அபராதத்துக்கு பதிலளித்திருந்த கூகுள் நிறுவனம், இந்த முடிவு இந்திய நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு பெரும் பின்னடைவு என்றும் அடுத்த படிகளை மதிப்பிடுவதற்கான முடிவை மதிப்பாய்வு செய்வோம் என்றும் கூறியது. CCI இன் சமீபத்திய அபராதத்துக்கு கூகுள் இன்னும் பதிலளிக்கவில்லை.


தேவையான நிதி விவரங்கள் மற்றும் ஆதார ஆவணங்களை வழங்க கூகுளுக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று CCI தெரிவித்துள்ளது.


கூகுள் ப்ளே ஸ்டோரின் கட்டண முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தி வாங்கும் அப்ளிகேஷன்கள் வாங்குதல்கள் தொடர்பான சிக்கல் குறித்து நவம்பர் 2020இல் CCI விசாரணையைத் தொடங்கியது. ஆப் டெவலப்பர்கள் தங்களுக்கு விருப்பமான கட்டணச் செயலாக்க முறையைத் தேர்ந்தெடுக்கும் திறனை அது கட்டுப்படுத்துவதால், அத்தகைய கொள்கை நியாயமற்றது என்பதே தங்களுடைய முதன்மையான பார்வை என்றும் கமிஷன் கூறியது.


அதன் மதிப்பீட்டின் அடிப்படையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் பணம் செலுத்தி பெறும் ஆப்ஸ் மற்றும் இன்-ஆப் பர்ச்சேஸ்களுக்கு ஆப்ஸ் டெவலப்பர்கள் கூகுள் ப்ளே பில்லிங் முறையைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவது ஆப் டெவலப்பர்கள் மீது நியாயமற்ற நிபந்தனைகளை விதிக்கிறது என்றும் இது ஆணையத்தின் விதிகளை மீறுவதாகவும் ஆணையம் கூறியது.




அப்ளிகேஷன்களை வாங்குவதற்கு அல்லது இன்-ஆப் பில்லிங்கிற்கு எந்தவொரு மூன்றாம் தரப்பு பில்லிங் அல்லது கட்டணச் செயலாக்க சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்தும் ஆப்ஸ் டெவலப்பர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம் என CCI, கூகுள் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. மூன்றாம் தரப்பு பில்லிங் அல்லது கட்டணச் செயலாக்கச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு, எதிராக அது பாரபட்சம் காட்டவோ அல்லது பாதகமான நடவடிக்கைகளை எடுக்கவோ கூடாது என்றும் ஆணையம் வலியுறுத்தியிருந்தது.


கூகுள் தற்போது இந்தியாவில் ஒரு பைலட் திட்டத்தை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்கும் டெவலப்பர்கள் 6-11 சதவிகிதச் சேவைக் கட்டணத்தில்  கூகுள் ப்ளே உடன் இணைந்து பயனர்களுக்கு கூடுதல் பில்லிங் முறையை வழங்க முடியும். இருப்பினும் கேமிங் டெவலப்பர்கள் இந்த பைலட் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.