உலகெங்கிலும் ஃபிஷிங் குற்ற அலை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. சமூக ஊடக பயனர்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் உள்ளவர்களின் முகங்களை நிர்வாண உடல்களால் மார்ஃபிங் செய்து, செக்ஸ் சாட் செய்வதுபோல் காட்சிப்படுத்தி, பின்னர் அதை வெளியிடுவோம் என்று மிரட்டி கோடிகள் சம்பாதிப்பது தற்போது அதிகரித்து விட்டது. பயனர்களுக்கு தங்கள் நற்பெயரைப் பாதுகாக்க பல லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.


அறிக்கையின்படி, இதுபோன்ற ஃபிஷிங் தாக்குதல்கள் அதிகமாகி வருவதாக காவல்துறை கூறுகிறது, பெரும்பாலும் ஹரியானா, உ.பி., ராஜஸ்தான் ஆகிய மூன்று இடங்களிலிருந்து பரத்பூர், மதுரா மற்றும் மேவாட் போன்ற இடங்களிலிருந்து ஒரு மோசடி கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களின் ஒருங்கிணைந்த தரவுகள் இல்லை என்றாலும், அவை தற்போது வெகுவாக அதுகரித்திருப்பத்தை போலீசார் உணர்கின்றனர். இது 'புதிய ஜம்தாரா' என்ற பெயரை பெற்றுள்ளது என்று போலீசார் கூறுகின்றனர்.



பேசின் என்ற ஒருவர் தனக்கு வந்த இன்ஸ்டாகிராம் ரெக்வஸ்ட்டை தொடர்ந்து அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அறிக்கை கூறுகிறது, "ஒரு பெண் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி, அவருடைய வாட்சப் எண்ணைக் கேட்டிருக்கிறாள். "எனக்கு அவளை தனிப்பட்ட முறையில் தெரியாது என்று, நான் அதைப் பகிரவில்லை. அதிர்ச்சிகரமானது என்னவென்றால், சில நிமிடங்களில், அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ கால்கள் செய்யத் தொடங்கினார். ஆரம்பத்தில் நான் அழைப்புகளை புறக்கணித்தேன், ஆனால் ஏழு அல்லது எட்டுக்குப் பிறகு, நான் பதிலளித்தேன்,” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.



"மறுபுறம் ஒரு ஆடையற்ற பெண் அநாகரீகமான செயல்களைச் செய்தாள். என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்க எனக்கு சுமார் 15 வினாடிகள் ஆனது. பின்னர், நான் அழைப்பைத் துண்டித்தேன், ”என்று அவர் கூறினார்.


சிறிது நேரம் கழிந்த பிறகு, அவருடைய குடும்பத்தார், உறவினர்களிடம் இருந்து ஒரு வீடியோ வந்தது. "அதில் என் உடல் வேறொரு வேற்று உடலோடு மார்ஃப் செய்யப்பட்டு அந்த பெண்ணுடன் நான் செக்ஸ் சாட் செய்வதுபோல எடிட் செய்யப்பட்டிருந்தது" என்று பேசின் கூறினார். அவர்களது நண்பர்களும், குடும்பத்தினரும் அவருக்கு கால் செய்து மெசேஜ் செய்து விசாரிக்க தொடங்கினர்.


அவர் டெல்லியின் பாதுகாப்பு காலனியில் உள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்தார்.


ஜூலை 4 ம் தேதி, ஆக்ரா சைபர் போலீசார் மேவாட்டைச் சேர்ந்த மூன்று நபர்களை கைது செய்தனர், அவர்கள் பல்வேறு வகையான இணைய குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் "மக்களை அச்சுறுத்தும் வகையில் நிர்வாண வீடியோ அழைப்புகள்" போன்றவைகளால் பணம் சம்பாதிக்கும் கும்பல். பாசினைக் குறிவைத்தது இதே கும்பல்தான் என்று போலீசார் நம்புகிறார்கள்.


தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், சமூக வலைதளங்கள் பயன்படுத்துவோர் பாதுகாப்பாகவும், இது போன்ற காயவர்களிடத்தில் சிக்காமல் இருக்க எச்சரித்துள்ளது காவல்துறை. இப்படியான மிரட்டல்கள் எதுவும் வந்தால், பணத்தை இழந்துவிடாமல், நேரடியாக காவல் துறையிடம் தயங்காமல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர்.