5G Spectrum Auction : ஒருவழியாக முடிந்த 5G அலைக்கற்றை ஏலம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் சில!

முகேஷ் அம்பானியின் ஜியோ ஏலத்தில் தனது முன்னிலையை உறுதிபடுத்தியுள்ளது.இந்த ஏலம் குறித்த சில தகவல்கள்: 

Continues below advertisement

இந்தியாவின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலம் இன்று முடிவடைந்தது, இதன் மூலம் ரூபாய் 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானியின் ஜியோ ஏலத்தில் தனது முன்னிலையை உறுதிபடுத்தியுள்ளது.

Continues below advertisement

இந்த ஏலம் குறித்த சில தகவல்கள்: 

விற்பனை வருவாய்க்கான தற்காலிக எண்ணிக்கை ரூபாய் 1,50,173 கோடி. மேலும் இறுதி எண்கள் கணக்கிடப்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏழு நாட்களாக நடந்த ஏலம் இன்று மதியம் நிறைவடைந்தது. அதிவேக மொபைல் இணைய இணைப்பை வழங்கும் திறன் கொண்ட 5G ஸ்பெக்ட்ரம் மூலம் பெறப்பட்ட மாப்-அப், கடந்த ஆண்டு விற்கப்பட்ட ரூபாய் 77,815 கோடி மதிப்புள்ள 4G அலைக்கற்றைகளுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். மேலும் 2010ல் 3G ஏலத்தில் இருந்து ரூபாய் 50,968.37 கோடி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ 4G ஐ விட 10 மடங்கு இது வேகமானது. லேக்-ஃப்ரீ இணைப்பு மற்றும் ரியல் டைமில் தரவைப் பகிர பில்லியன் கணக்கான இணைக்கப்பட்ட சாதனங்களை இயக்கும் திறன் கொண்ட ஏர்வேவ்ஸில் இவை முதலிடம் பிடித்தன.

ஜியோவைத் தொடர்ந்து ஏலத்தில் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா லிமிடெட் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. இந்த ஏலத்தில் புதிதாக நுழைந்த அதானி குழுமம், தனியார் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கை அமைப்பதற்காக 26 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வாங்கியதாக கூறப்படுகிறது. பார்தி மற்றும் ஜியோ ஆகிய இரண்டும் 5Gக்கு வோடாபோன் ஐடியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்புடன் ஒரு வைடர்-இந்தியா ஸ்பெக்ட்ரம் தடத்தை உருவாக்கியுள்ளது.

அரசாங்கம் 10 அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரத்தை வைத்தது, ஆனால் 600 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 2300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகளுக்கான ஏலங்களை யாரும் பெறவில்லை. ஏலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தேவை 5G பேண்டுகளுக்கும் (3300 Mhz மற்றும் 26 GHz), அதே சமயம் கால் பகுதிக்கும் அதிகமான தேவை 700 Mhz பேண்டுகளுக்கும் இருந்தன. இவை முந்தைய இரண்டு ஏலங்களில் (2016 மற்றும் 2021) விற்கப்படாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜூலை 26 அன்று நடந்த ஏலத்தின் முதல் நாளில் ரூபாய் 1.45 லட்சம் கோடி வரை ஏலம் பேசப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola