உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு சர்வதேச அளவில் 22வது இடத்தில் உள்ள பிரக்ஞானந்தா முதல் இடத்தில் உள்ள கார்ல்செனை எதிர்கொண்டார். முதல் சுற்று மற்றும் இரண்டாவது சுற்று என முதல் இரண்டு சுற்றுகள் டிராவில் முடிந்ததால், போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் டை-பிரேக்கர் சுற்று இன்று நடைபெற்றது. 


உலகக்கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா கவனம் பெறத்தொடங்கியது முதல் அவருடன் கவனம் பெற்ற நபர் பிரக்ஞானந்தா தாயார் நாகலட்சுமி. பிரக்ஞானந்தா ஒவ்வொரு முறை போட்டியில் கலந்து கொள்ளும்போது மிகவும் எதிர்பார்ப்புடன் பிரக்ஞானந்தாவின் வெற்றிக்காக காத்திருந்த அவரின் புகைப்படம் உலகளவில் ட்ரெண்ட் ஆனதும் பிரக்ஞானந்தாவின் பின்னணியை அறிய ஒட்டுமொத்த உலகமும் ஆசைப்பட்டது. பிரக்ஞானந்தாவை இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என மட்டும் நினைக்காமல் அவர் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். 




பிரக்ஞானந்தா ஆகஸ்ட் 10, 2005 அன்று சென்னையில் ரமேஷ்பாபு மற்றும் நாகலட்சுமிக்கு மகனாகப் பிறந்தார். அவரது மூத்த சகோதரி வைஷாலியும் ஒரு சதுரங்க வீராங்கனை மற்றும் இரண்டு முறை யூத் சாம்பியனாக இருந்துள்ளார்.



பிரக்ஞானந்தா எப்போது செஸ் விளையாடத் தொடங்கினார்?




அவரது சகோதரி விளையாடுவதைப் பார்த்து விளையாட்டில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட பிறகு, 2013 ஆம் ஆண்டில் அவர் தனது 7 வயதில் 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பை  வென்றார். இந்த வெற்றிக்குப் பிறகு, ​​செஸ் ப்ராடிஜிக்கான முதல் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி அவருக்கு FIDE மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது. 2015 ஆம் ஆண்டு U-10 பிரிவில் (10 வயதுக்குட்பட்டவர்களுக்கான) மீண்டும் பட்டத்தை வென்றார்.




பிரக்ஞானந்தாவுக்கு சர்வதேச அங்கீகாரம்




பிரக்ஞானந்தா 2016 இல் 10 ஆண்டுகள் 10 மாதங்கள் மற்றும் 19 நாட்களில் இளைய சர்வதேச மாஸ்டர் ஆனார். அடுத்த ஆண்டு 2017 இல் அவர் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார்.




இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர்




2018 ஆம் ஆண்டில் பிரக்னாநந்தா 12 வயது, 10 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் இந்த சாதனையை அடைந்து இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் ஆனார். அவர் இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபனில் லூகோ மொரோனியை வீழ்த்தி இந்த  சாதனையைப் படைத்தார்




மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தல்




2022 ஆம் ஆண்டில், ஆன்லைன் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருக்குப் பிறகு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஆனார். உலக சாம்பியனை வீழ்த்திய இளையவரும் இவர்தான் என்ற பெருமையை அப்போது பெற்றார். 




செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர்




18 வயதில், பிரக்ஞானந்தா இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.